மசூதியில் அதிபயங்கர வெடிகுண்டு.. 15 பேர் உடல் சிதறி பலியான சோகம்.!!
in Pakistan Masque bomb attack peoples died
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் குவாட்டா நகரில் இருக்கும் மசூதியில் நேற்று முன்தினதன்று சிறப்பு தொழுகையானது நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஏராளமான பொதுமக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
இந்த தொழுகையின் போது மசூதிக்குள் பயங்கர வெடி சப்தத்துடன் கூட்டினுள் வெடித்தது. இதன் காரணமாக அப்பகுதியே அதிர்ந்துபோன நிலையில்., இந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
மேலும்., 20 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில்., இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மசூதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அவசர ஊர்தியின் உதவியுடன் அங்குள்ள மருத்துவமனைக்கு அனைவரையும் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமையமானது கவலைக்கிடமாக இருப்பதன் காரணமாக பலி எண்ணிக்கை உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பானது பொறுப்பேற்றுள்ள நிலையில்., அங்குள்ள சந்தையில் வைக்கப்பட்ட மோட்டார் வாகன வெடிகுண்டு வெடித்து இரண்டு பேர் பலியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Pakistan Masque bomb attack peoples died