120 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு.. அமைதியாக இருந்து அதிரடி காட்டிய இராணுவம்.!! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாட்டில் உள்ள நைஜீரியாவில் கடந்த 2015 ஆம் வருடம் முதல் மதத்தின் அடிப்படையிலான பயங்கரவாதம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் ஆயுத போரை பயங்கரவாத அமைப்பினர் கைகளில் எடுத்தனர். 

இதனால் இவர்கள் அவ்வப்போது தாக்குதல் மேற்கொண்டு, அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், நைஜீரியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாலி - புர்கினோ பாசோ நாடுகளின் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்துள்ளனர். 

இது தொடர்பான தகவல் நைஜீரியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் இராணுவத்தினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் அதிரடி தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் சுமார் 120 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பான தகவலை நைஜீரிய மற்றும் பிரான்ஸ் இராணுவ மந்திரி இசபாவ் கடம்பே தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினரின் அதிரடி செயல்பாட்டிற்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Nigeria terrorist 120 members killed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->