21 பேரை உயிருடன் எரித்தும் மனமடங்காது, அரங்கேறிய கொடூர தாக்குதல்.!! பயங்கரவாதிகள் அட்டூழியம்...!! - Seithipunal
Seithipunal


நைஜீரிய நாட்டில் அதிகளவு அதிகம் செலுத்தி வரும் போகோஹரம் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது அங்குள்ள கிராமங்களில் நள்ளிரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து கொடூர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். 

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பானது தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள வடக்கு மாகாண பகுதியில் உள்ள காட்ஸினா உள்ளிட்ட இரண்டு கிராமத்திற்குள் ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளார். 

இவர்கள் கிராமத்தில் புகுந்து மேற்கொண்ட கொடூர தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மொத்தமாக சுமார் 30 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். இரண்டு கிராமத்திலும் இருந்த பாதுகாப்பை மீறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும், கடந்த புதன்கிழமையின் போது அங்குள்ள கத்துனா மாகாணத்தில் இருக்கும் பாகலி கிராமத்தில், ஒரே குடும்பத்தை சார்ந்த 21 பேரை உயிருடன் எரித்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Nigeria Boko Haram's terrorist attack peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->