நூல்பிடித்தவாறு சென்ற பேருந்துகள்.. அடுத்தடுத்து அப்பளம் போல நொறுங்கிய சோகம்..! 13 பேர் சம்பவ இடத்திலேயே., 29 பேர் மருத்துவமனையில்...!!
in mexico road accident peoples died in spot
இந்த உலகத்தில் விபத்துக்கள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு., அதனால் பல உயிரிழப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில்., மெக்ஸிகோ நாட்டில் சாலை விபத்து ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் இருந்து பச்சுவ்கா நகரை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது.
இந்த நிலையில்., அங்குள்ள உள்ளூர் நேரப்படி இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் சென்று கொண்டிருந்த நிலையில்., இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுள்ளது.
அந்த சமயத்தில்., முன்னால் சென்ற பேருந்து எதிர்பாராதவிதமாக நிறுத்தப்படவே., பின் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., சுமார் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள்., இதுகுறித்து காவல் துறையினருக்கும் அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர்., படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in mexico road accident peoples died in spot