போதைப்பொருள் கும்பலுக்கும் - காவல்துறையினருக்கும் துப்பாக்கி சண்டை..! பரிதாபமாக பலியான காவல்துறை அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


மெக்ஸிகோ நாட்டில் கடந்த சில நாட்களாகவே கடத்தல் கும்பலின் அட்டூழியமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து கூட்டம் கூட்டமாக சேர்ந்து பாதுகாப்பு படை அதிகாரிகளை கொன்று குவித்து வருகின்றனர். 

இந்த நிலையில்., மெக்ஸிகோ நாட்டின் போதைப்பொருள் கடத்தல் மன்னனான எல் சாப்போஸின் இரண்டு மகன்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யும் நோக்கில்., இவர்கள் பயணம் செய்த காரினை கடத்தல் கும்பல் தாக்க துவங்கியுள்ளனர். 

இந்த தாக்குதலின் போது 8 காவல் துறை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., இவர்கள் உலகம் முழுவதும் போதை பொருளை கடத்தல் செய்யும் எல்.சாபோஸ் என்பவரின் மூத்த மகன் இவான் குஸ் மற்றும் இரண்டாவது மகன் ஓவிடியோ என்பதும் தெரியவந்தது. 

இவர்கள் இருவரும் மெக்ஸிகோவில் உள்ள இல்லத்தில் இருப்பதாய் அறிந்த காவல் துறையினர்., இவர்களை கைது செய்ய முயற்சித்த போது காவல் துறையினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் காவல் துறையினர் பலியாகியது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mexico police killed by drug gang


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->