மாபியா கும்பல் மீண்டும் அட்டூழியம்..! 4 காவல் அதிகாரிகள் பரிதாப பலி.!!
in mexico mafia gang fight with police men
கஞ்சா., ஹெராயின்., அபின்., பிரௌன் சுகர் போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் முக்கிய நாடாகவும்., உலகின் முதல் நாடாகவும் மெக்சிகோ இருந்து வருகிறது. இந்நாட்டில் வாழ்ந்து வரும் போதைப்பொருள் மாபியாக்கள் அனைவரும் கொலை., கொலை மற்றும் கற்பழிப்பு., தாக்குதல் போன்றவற்றின் மூலமாக தங்களுக்குள்ளாகவே இருக்கும் தொழிற்போட்டியில் பழிதீர்த்து வருகின்றனர்.
இந்த கும்பல் கஞ்சா., ஹெராயின்., அபின்., பிரௌன் சுகர் போன்ற செடிகளை வளர்ப்பது மட்டுமின்றி., வெளிநாட்டு தரகர்களுக்கு விற்பனை செய்தும் வருகின்றனர். இதில் தொழிற்போட்டியின் காரணமாக மாபியா கும்பல்களுக்கு இடையே நிலவிவரும் போட்டியால் பல கொடூர கொலைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
கடத்தல்காரர்கள் நிறைந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர் தாக்குதல்கள் அரங்கேறி வரும் நிலையில்., மர்ம பிணங்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டு பெரும் அதிரவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சர்ஸ் மாகாணத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் கொஹுய்லா மாநிலத்திற்கு உட்பட்ட யூனியன் பகுதி உள்ளது.
இந்த பகுதியில் மாபியா கும்பலானது அப்பகுதியில் கொள்ளையடிக்கவும்., சூறையாடுவதற்கும் ஆயுதமேந்தி வந்து கொடூர தாக்குதலை அரங்கேறியது. மேலும்., அப்பகுதியில் உள்ள வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தினர். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்., சுமார் ஒருமணிநேர துப்பாக்கி சண்டையில் 4 காவல் துறையினர் பரிதாபமாக பலியாகினர். மேலும்., மாபியா கும்பலை சார்ந்த 14 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in mexico mafia gang fight with police men