அதிகாலையில் நடந்த கோர விபத்து.! தீக்கிரையான 21 உயிர்கள்.!! ஓட்டுனரின் அவசரத்தால் நேர்ந்த துயரம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலுமே பல்வேறு விதமான விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஒரு நொடிக்கு கிட்டத்தட்ட பல விபத்துகள் எதோ ஒரு இடங்களில் ஏற்பட்டு., அதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 

மெக்ஸிகோ நாட்டில் உள்ள மெக்ஸிகோ நகரில் இருந்து அங்குள்ள துஸ்லா பகுதியை நோக்கி செல்வதற்கு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு., மெக்ஸிகோ நகரில் இருந்து சென்று கொண்டு இருந்தது. 

இந்த பேருந்தானது அங்குள்ள வெராகுருஸ் பகுதிக்கு அருகே சென்ற சமயத்தில்., பேருந்துக்கு முன்னதாக ட்ராக்டர் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதனை முந்தி செல்ல பேருந்து ஓட்டுநர் முடிவு செய்து., முந்தி சென்ற நேரத்தில் எதிர்பாராத விதமாக பேருந்து ட்ராக்டரின் மீது மோதியது. 

நொடிப்பொழுதில் நடந்த இந்த விபத்தில்., பேருந்து மோதிய வேகத்திலேயே தீப்பற்றி எரிய துவங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 17 பேர் சம்பவ இடத்திலேயே தீக்கிரையாகி பலியாகினர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர்., படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., நான்கு பேர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mexico have a accident bus and tractor 21 peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->