அரங்கேறிய வெறித்தன துப்பாக்கிசூடு..! 6 பேர் பரிதாப பலி... தலைதெறித்தோடிய மக்கள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் குவான்ஜூவாட்டோ மாகாணத்தின் மத்திய யுரியங்காட்டோ நகர் பகுதியில் இருக்கும் எரிவாயு நிலையத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை சுமார் 3.15 மணிக்கு துப்பாக்கி ஏந்திய குழுவானது திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது. 

இதனால் பதறிப்போன மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்த நிலையில்., இந்த துப்பாக்கி சூட்டின் காரணமாக 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும்., 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தியினர் காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Mexico image,

இதுமட்டுமல்லாது சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினரும் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்., இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., மெக்சிகோவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும்., குவான்ஜூவாட்டா மாகாணமானது சுற்றுலா பயணிகளால் விரும்பப்படும் மாகாணமாக இருந்து வரும் நிலையில்., நடப்பாண்டின் 11 மாதத்தில் 3,211 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாகாணத்தில் உள்ளூர் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் திருட்டு எரிபொருள் வர்த்தகர்கள் இடையே மோதல் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mexico gun fire peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->