கரையொதுங்கிய வினோத உயிரினம்.. அதிர்ந்துபோன மக்கள்.. உள்ளூர் மக்களின் பகீர் தகவல்.!!
in mexico fish died peoples shocked due to eyeless
அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ நாட்டில் அமைந்துள்ள கடற்கரை நகரம் புவேர்ட்டோ வல்லார்டா. இது அழகிய கடற்கரை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இப்பகுதியின் எழில் மற்றும் இயற்கை அழகானது ரசிக்க பெரும் மன மகிழ்ச்சியானது ஏற்படும். மேலும், கடலில் அலைசருக்கு சாகசம் செய்யவும் சிறப்பாக இருக்கும். இதனால் இந்த இடத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவது உண்டு.
இந்த நேரத்தில், இந்த பகுதியில் அமைந்துள்ள டெஸ்டிலாடெரஸ் என்னும் கடற்கரையில் கண்கள் இல்லாத வினோத உயிரினமானது கரையொதுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட மக்கள் கடல் உயிரினம் இறந்து கரையொதுங்கியுள்ளது என்று எண்ணியுள்ளனர். மேலும், தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு டால்பின் போல தோற்றம் அளித்துள்ளது.
இதனையடுத்து டால்பின் இறந்து கரையொதுங்கியுள்ளது என்று எண்ணி மக்கள் அருகே சென்று பார்த்த நிலையில், இறந்து கரையொதுங்கிய உயிரினம் கண்கள் இல்லாது கொடிய பற்கள் மற்றும் தலைப்பிரட்டை போன்ற வாலுடன் இருந்துள்ளது. இந்த உயிரினம் தொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவித்த சமயத்தில், பசுபிக் பெருங்கடலின் சூரிய ஒளி செல்ல இயலாத ஆழத்தில் வாழும் உயிரினங்களுக்கு கண்கள் தேவைப்பட்டால் இருக்கலாம், ஏனெனில் கடலின் ஆழம் காரணமாக இருள் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in mexico fish died peoples shocked due to eyeless