கென்யா தொடர் கனமழை வெள்ளம் எதிரொலி.. 34 பேர் பரிதாப பலி..!! செய்வதறியாது திகைக்கும் மக்கள்.!!
in kenya flood peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் அரங்கேறும் விபத்துகளால் பலரும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். மனிதனால் தயாரிக்கப்பட்ட இயந்திரத்தால் ஒரு புறம் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இதனைப்போன்று மனிதன் இயற்கையை அளித்ததற்கு தன் பங்கில் இருக்கும் பணியையும் இயற்கை செய்துகொண்டு தான் இருக்கிறது. இயற்கையை நமது தேவைக்காக எல்லையை மீறி அளித்து கொண்டு வருவதால் பருவநிலை மாற்றமானது தொடர்ந்து ஏற்படுகிறது.
பருவநிலை மாற்றம் மற்றும் கால நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றின் காரணமாக கடுமையான மழை வெள்ளம்., புயல்., வறட்சி., கடுமையான வெயில் போன்றவை மக்களை வாட்டி வதைத்து., சில சமயங்களில் உயிரிழப்புகளும் அரங்கேறுகிறது.
இந்த நிலையில்., கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழையானது பெய்து வரும் நிலையில்., அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த தகவலை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில்., இரவு கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அங்குள்ள டக்மால் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 17 பேர் புதையுண்டு பலியானதாகவும்., வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியானது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in kenya flood peoples died