அமைதிப்போராட்டத்தை சீர்குலைத்த சமூக விரோதிகள்.. அரங்கேறிய பெரும் துயரம்... பலியான அப்பாவி மக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஈராக் நாட்டின் அரசிற்கு எதிராக அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில் இருந்த சமயத்தில் இருந்தே பல எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் வேலைவாய்ப்பின்மை., ஊழலை ஒலிப்பது மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு போன்றது தொடர்பான கோரிக்கையை நிறுத்தி நாடு முழுவதும் முக்கிய நகரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும்., இந்த போராட்டத்தில் ஈடுபடும் படும் நபர்களின் மீது அந்நாட்டின் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வரும் நிலையில்., வன்முறையில் ஈடுபடும் நபர்களின் மீதும் கண்ணீர் புகைக்குண்டை வீசி வருகின்றனர். வன்முறை தொடர்ந்து அதிகரித்ததால் நூற்றுக்கணக்கான போராட்டகாரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 

இந்த போராட்டத்திற்கு பின்னர் ஈராக் நாட்டின் அரசு செயலிற்கு ஐநா சபையின் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்நாட்டின் பிரதமர் அதெல் அப்துல் மஹிதி பதவி விலகுவதாக அறிவித்தும் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. 

Iraq violence,

இந்த நேரத்தில்., ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்த நிலையில்., அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு மற்றும் கத்தி போன்ற ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலின் போது 3 காவல் துறையினர் உட்பட 19 பேர் பரிதாபமாக பலியான நிலையில்., 70 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்., அமைதி போராட்டத்தை சீர்குலைக்க சமூக விரோதிகள் ஊடுருவி வன்முறையை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in iraq violence peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->