கரோனாவால் கோரிக்கை வைக்கும் ஈரான் தமிழர்கள்.. அடுத்தடுத்து உயரும் பலி எண்ணிக்கை.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவிவந்த கரோனா வைரஸ் சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மேலும், ஈரான் மட்டும் தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் கரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஈரான் நாட்டில் இருவருக்கு கரோனா பரவியிருப்பது தெரியவந்த நிலையில், தற்போதுவரை சுமார் 26 பேர் ஈரானில் பலியாகியுள்ளனர். சீன நாட்டினை தவிர்த்து அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் முதல் நாடாக உள்ளது. 

மேலும், தற்போது வரை ஈரான் நாட்டில் 112 பேர் கரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

தற்போது வரை ஈரானில் 245 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கொம் நகரில் இருந்து கரோனா பரவத்துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் நாட்டில் தங்கியிருந்து மீன்பிடித்தொழில் செய்து வரும் தமிழர்கள் தங்களை அழைத்து செல்ல மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியை சார்ந்த 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கிஸ் தீவு, சின்கா தீவு போன்ற நான்கு தீவுகளில் தங்கியிருந்து பணியாற்றி வரும் நிலையில், இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Iran tamil fishermen request govt to rescue form iran for corona virus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->