கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு இயங்கிய பேருந்து.. பரிதாபமாக உயிரிழந்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துகள் அரங்கேறி பெரும் சோகமானது ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில்., ஈரான் நாட்டில் உள்ள மஜாந்திரன் மாகாணத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்தனர். 

இந்த பேருந்து அங்குள்ள ஜந்த் நகருக்கு அருகே வந்து கொண்டு இருந்த போது பேருந்தின் பிரேக் பழுதான நிலையில்., ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

accident,

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்குள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட மீட்பு பணியில் பலியானவர்களின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்., படுகாயமடைந்து இருந்த 24 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in iran road accident peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->