கரோனாவால் கதிகலங்கி இருக்கும் ஈரானிற்கு ஏற்பட்ட அடுத்த பிரச்சனை.. தலைதெறித்து ஓடிய மக்கள்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவிவந்த கரோனா வைரஸ் சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மேலும், ஈரான் மட்டும் தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் கரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஈரான் நாட்டில் இருவருக்கு கரோனா பரவியிருப்பது தெரியவந்த நிலையில், தற்போதுவரை சுமார் 724 பேர் ஈரானில் பலியாகியுள்ளனர். மேலும், தற்போது வரை ஈரான் நாட்டில் 13,937 பேர் கரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

நேற்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கொம் நகரில் இருந்து கரோனா பரவத்துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஈரான் நாட்டில் உள்ள தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கமானது ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அங்குள்ள பந்தர் காமர் பகுதியில் இருந்து 39 கிமீ தொலைவில் உள்ள பகுதியை மையமாக வைத்து 5.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கரோனா பாதிப்பால் மக்கள் பரிதவித்து வரும் நிலையில், நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Iran earthquake peoples panic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->