அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கம்.. 9 பேர் பரிதாப பலி.!!
in Iran earthquake peoples died
ஈரான் - துருக்கி எல்லைப்பகுதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் ஈரான் நாட்டின் மேற்கு அசிர்பைஜன் மாகாணத்தின் குவாடூர் கிராமத்தை மையமாக கொண்ட நிலநடுக்கமானது, அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி 9.23 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஈரான் நாட்டில் எல்லைப்பகுதி மற்றும் துருக்கி நாட்டின் வான் மாகாணத்தில் அமைந்துள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் சுமார் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில், சுமார் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகளில் பேரிடர் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில், ஈரான் நாட்டில் உள்ள அசிர்பைஜன் மாகாணத்தின் குவடூர் பகுதியிலேயே மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதும், இரண்டு முறையும் நிலநடுக்கம் 5.7 ஆக பதிவாகி இருந்தது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Iran earthquake peoples died