10 நிமிடத்திற்கு ஒரு பலி... 50 பேர் அனுமதி... பதறவைக்கும் ஈரான் ரிப்போர்ட்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையாக வைத்து உருவாகி வந்த கரோனா வைரஸின் பாதிப்பு, உலகம் முழுவதிலும் சுமார் 184 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸின் தாக்கம் சீன நாட்டிற்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, அமெரிக்கா, சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வைரஸின் தாக்கத்திற்கு 276,638 பேர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11,419 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் நாட்டில் கரோனா பாதிப்பிற்கு பலியான நபர்கள் 1,433 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், அந்நாடு முழுவதுமாகவே 19,644 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கடந்த வெள்ளிக்கிழமை முதலாகவே தொழுகை மற்றும் பள்ளி, பல்கலைக்கழகங்கள் விடுமுறை விடப்பட்டது. 

இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் நாட்டில் 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், 50 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதி செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Iran corona virus peoples died ratio increased


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->