சீனாவை தொடர்ந்து கரோனாவால் பதறும் ஈரான்.. அதிர்ச்சியாக உயர்ந்த பலி எண்ணிக்கை.!!
in Iran corona virus peoples died quantity
சீன நாட்டினை மையமாக வைத்து கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தின் இறுதி முதலாக பரவ துவங்கிய கரோனா வைரஸ் அடுத்தடுத்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கையானது அடுத்தடுத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும், இந்த வைரசால் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் அதிகமாக சென்றுள்ள நிலையில், சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீன நாடு மட்டுமல்லாது தென்கொரியா மற்றும் ஈரானில் தற்போது கரோனா அதிகளவு பரவி வருகிறது.
கரோனாவிற்கு ஈரானில் நேற்றுவரை சுமார் 77 பேர் உயிரிழந்த நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து சுமார் 15 பேர் பலியாகியுள்ளனர்.
அடுத்தடுத்து 15 பேர் உயிரிழந்த காரணத்தால் பலி எண்ணிக்கையும் 92 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பெரும் சோகம் மற்றும் கரோனா பயம் அதிகரித்துள்ளது. மேலும், அங்குள்ள மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகைகளும் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Iran corona virus peoples died quantity