ஈரானில் கரோனா பெருமளவு தாக்கிய சோகம்... உலக நாடுகளின் உதவிக்கு அழைப்பு விடுத்த ஈரான்.!!
in Iran corona virus govt want help world countries
சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், சீன உள்ளிட்ட சுமார் 97 நாடுகளுக்கு கரோனா வைரஸ் தற்போது வரை பரவியுள்ளது. தற்போது வரை மொத்தமாக 3,484 பேர் கரோனாவால் பலியாகியுள்ளதாகவும், 1,02,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸால் பெருமளவு சீன நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் மட்டும் 3,070 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சீன நாட்டின் பொருளாதாரம் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் நடைபெற்ற வர்த்தக போருக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகவும் கருதப்படுகிறது.
சீன நாட்டினை தொடர்ந்து இத்தாலி நாட்டிலும் கரோனா பாதிப்பு அடுத்தடுத்து அதிகரித்து, இத்தாலியில் 197 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து கரோனா உலகளவிலான பலி எண்ணிக்கையும் 3,916 ஆக உயர்ந்தது. இதனைப்போல ஈரான் நாட்டிலும் 145 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பாலி எணிக்கையும் அடுத்தடுத்து அதிகரித்து 5,823 பலி எண்ணிக்கை ஆகியுள்ளது.
இதன் காரணமாக ஈரான் சர்வதேச நாடுகளின் ஆதரவை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பான ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவேத் ஷெரிப் பேசிய நேரத்தில், கருணாவை எதிர்த்து போராட உலக நடுகல் தோல் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து வெற்றியடைவோம் என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Iran corona virus govt want help world countries