வளைவுநெளிவான மலைப்பாதையில் விபத்திற்குள்ளான பேருந்து... துடிதுடித்து உயிரிழந்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துக்கள் என்பது தொடர் கதையாக உள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துக்கள் அரங்கேறி நொடிப்பொழுதில் பல மக்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். 

இந்தோனேஷியா நாட்டில் இருக்கும் ஜாவா மாகாணத்தில் டாங்குபன் பகுதியில் இருக்கும் பெராகு எரிமலையை சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்வது வழக்கம். 

இந்த வகையில் நேற்று 58 சுற்றுலா பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த பேருந்து அங்குள்ள சுபா மாவட்டத்தில் இருக்கும் பலாசாரி சாலையில் வளைவான பாதைகளில் சென்று கொண்டிருந்தது. 

இந்த நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப் பகுதியில் தாறுமாறாக ஓடி அங்கு உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில், சுமார் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், 30 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய பேருந்துகள் மற்றும் மோசமான சாலைகள் இருப்பதால் விபத்துகள் தொடர்கதையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Indonesia tourist bus accident peoples died


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->