இந்தோனேசியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. பதறிப்போன மக்கள்..!!
in Indonesia earthquake
இந்தோனேசிய நாட்டில் உள்ள பப்புவா மாகாணத்தில் இருக்கும் ஜெயபுரா மாவட்டத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 4.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 11 கிமீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் சில வினாடிகளே நீடித்த நிலையில், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளே இருந்த மக்கள் பதறியபடி வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் சுனாமி எச்சரிக்கை ஏதும் கூறப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் தெரியவராத நிலையில், இந்தோனேசிய நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil