டிவியில் புகைப்படத்தோடு நான் வர வேண்டும்... வாலிபரின் இறுதி சிரிப்பு..! அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரைச் சார்ந்தவர் ஜான்டி பிரேவரி (வயது 18). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியன்று இலண்டனில் இருக்கும் அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார். 

இந்த அருங்காட்சியகத்திற்கு பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த 6 வயதுடைய சிறுவன் தனது தாயாருடன் வந்திருந்த நிலையில்., திடீரென 6 வயது சிறுவனை தூக்கி கட்டிடத்தின் மாடிக்கு ஓடி பெரும் பரபரப்பை ஜான்வி ஏற்படுத்தினார். 

மேலும்., இதனை அறிந்த அங்கிருந்த மக்கள் ஜாண்டியை பிடிப்பதற்காக விரட்டிச் சென்ற நிலையில்., சிறுவனை அருங்காட்சியகத்தின் 10 வது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிந்துள்ளார். 

England, England city,

நல்ல வேலையாக சிறுவன் அருங்காட்சியகத்தின் 5 ஆவது தளத்தில் விழுந்த நிலையில்., பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினான். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., ஜாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

England, England court,

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில்., இவ்வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி எந்த விதமான பயமும் இல்லாது., தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 

இதுமட்டுமல்லாது மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும்., பத்திரிகையில் தனது பெயர் புகைப்படத்துடன் வர வேண்டும் என்று விரும்பியதால் இதனை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி இவ்வழக்கு தீர்ப்பை பிப்ரவரி மாதம் ஒத்திவைத்துள்ள நிலையில்., இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in England man try to famous lucky saved child


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->