சாலையில் செல்பவர்களை எட்டி உதைத்து வீடியோ எடுக்கும் சைக்கோ கும்பல்..! சாலையில் நடப்பவர்கள் கவனம்..!!
in England country peoples attacked by culprit psycho
இந்த உலகத்தில் பலவிதமான துயரங்கள் ஏற்பட்டு வருகிறது. பலரும் பல விதமான காரணத்திற்க்காக காயமடைந்தும்., உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில்., சிலரின் ஆசைக்காக பலரும் பரிதாபமாக பலியாகி வருவதும்., காயமடைந்த சோகமும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில்., இங்கிலாந்து நாட்டில் அதிகளவில் குற்றங்கள் நடைபெற்று வருவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. மேலும்., கடந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே ஏழு கொலைகள் அரங்கேறியுள்ளது.
ஒரு மாதத்திற்குள்ளாகவே பல கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில்., தற்போது அடுத்த பிரச்சனை தலைதூக்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் சாலையில் சைக்கிளில் செல்லும் மக்களை., இரு சக்கரத்தில் வந்து உதைத்து தள்ளும் கொடூரம் அரங்கேறி வருகிறது.
இதனால் பல மக்கள் பரிதாபமாக காயமடைந்து வரும் நிலையில்., இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய காவல் துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் முன்னாள் சென்று ஆட்களை எட்டி உதைப்பதும்., பின்னால் இவருடன் வரும் நபர் இதனை காட்சிப்பதிவாக பதிவு செய்து கொள்கிறார். இந்த சைக்கோ கும்பலை பிடிப்பதற்கு காவல் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in England country peoples attacked by culprit psycho