தாக்குதலை அரங்கேற்ற காத்திருந்த பயங்கரவாதிகள்.. சுதாரித்த இராணுவம்.. அதிரடி நடவடிக்கை.!!
in Egypt terrorist attack 10 persons died
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, கடந்த 2013 ஆம் வருடத்தின் ஜூலை மாதத்தில் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இதன் பின்னர் இந்த நாட்டில் செயல்பட்டு வரும் சினாய் நகர் பயங்கரவாத அமைப்பு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்.
மேலும், சினாய் நாட்டினை மையமாக கொண்ட பயங்கரவாத அமைப்பினர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பாகும். இவர்களின் தாக்குதலில் அவ்வப்போது நூற்றுக்கணக்கான காவல் துறையினர், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டு வந்தனர்.
இவர்களின் தாக்குதலை கட்டுக்குள் வைக்க காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினரும் பதில் தாக்குதல்களில் ஈடுபடுவது உண்டு. இந்த நிலையில், பயங்கரவாத குழுவை சார்ந்த நபர்கள் வடக்கு சினாய் நகர் பகுதியில் இருக்கும் சோதனையில் சாவடியில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்ற இருந்த நிலையில், இராணுவ வீரர்கள் சுதாரித்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் 2 அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Egypt terrorist attack 10 persons died