வரலாறு காணாத மழைப்பொழிவு.. திகைக்கும் மக்கள்.!! வெள்ளத்தில் மிதக்கும் துபாய்.!! - Seithipunal
Seithipunal


துபாய்., அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் கடந்த 3 நாட்களாக கடுமையான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சில பகுதிகளில் முக்கிய சாலைகள் வெள்ளப்பெருக்கினால் மூழ்கியது. தாழ்வாக இருந்த பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தினால் சூழப்பட்டது. 

இதுமட்டுமல்லாது ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கிய நிலையில்., வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. சாலைகளும் பெரும்பாலான இடங்களில் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

அங்குள்ள குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். 

dubai,

மேலும்., சூறாவளி காற்றோடு மழை பெய்து வருவதால் மக்கள் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில்., கடுமையான குளிரின் காரணமாக மக்கள் செய்வதறியாது திகைத்த நிலையில் உள்ளனர். 

பலத்த காற்றின் காரணமாக அபுதாபி போன்ற பல இடத்தில் இருக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. மேலும் அங்குள்ள ராசல் கைமா பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள மக்களை ஹெலிகாப்டரில் மீட்டுள்ளனர். 

தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் களத்தில் இறங்கி மக்களை பாதுகாத்து வருகின்றனர். கடந்த 24 வருடங்களில் இல்லாத அளவிற்கு அமீரகத்தில் மழை பெய்துள்ளதும்., துபாயில் சுமார் 15 செ.மீ மழையும் கொட்டி தீர்த்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dubai rain flood peoples panic


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->