117 நாட்கள் மூளைசாவுடன் படுக்கையில் இருந்த பெண் குழந்தையை பெற்றெடுத்த நிகழ்வு.! சாதனை படைத்த மருத்துவர்கள்..!!
in Czech Republic brain death lady delivery baby after 117 days treatment
இன்றுள்ள காலகட்ட நிலையில் மருத்துவர்களால் முடியாதது எதுவுமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அன்றைய காலங்களில் அறுவை சிகிச்சை என்றாலே பயம்., அறுவை சிகிச்சை செய்தாலும் உயிருடன் வருவோமா என்ற தருணம்., விபத்தில் காயமடைந்தால் காப்பாற்ற முடியுமா? என்று பல சந்தேகங்களும் கேள்விக்குறிகளும் இருந்தது.
இந்த கேள்விக்குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்., இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக மருத்துவ துறையானது அபரீத வளர்ச்சியை அடைந்துள்ளது. தற்போது நாம் காணவிருக்கும் நிகழ்வு., செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற நிகழ்வு தான். மூளைச்சாவு அடைந்த பெண்ணின் வயிற்றல் இருக்கும் குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடிய போராட்டத்தின் வெற்றி குறித்த செய்திதான்.
ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசு நாட்டில் இருக்கும் மருத்துவமனையில்., கடந்த ஏப்ரல் மாதத்தில் சுயநினைவின்றி பெண்ணொருவர் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண் அனுமதிக்கப்பட்ட சமயத்தில்., பெண் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில்., பரிதாபமாக அவரின் மூளையும் இறந்துள்ளது. இதனையடுத்து மூளைச்சாவு அடைந்தாலும் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவினை மருத்துவர்கள் காப்பாற்ற திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து பெண்ணிற்கு உயிர் காக்கும் உபகரணங்கள் உடனடியாக பொருத்தப்பட்டு., செயற்கை சுவாசத்தின் மூலமாக சுவாசத்தை வழங்கியுள்ளனர். சுயநினைநவின்றி இருக்கும் தாயாரின் உடல் நிலை மற்றும் அவரின் குழந்தை என இரு உயிரையும் தீவிரமாக கண்காணித்து வந்த மருத்துவர்களின் உதவியோடு., மூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு கருவளர்ச்சியயை கருத்தில் கொண்டு., செயற்கை கருவிகள் மூலமாக நடைப்பயிற்சியும் அளித்தனர்.
பின்னர் சுமார் 117 நாட்களில் வாழ்வா? இறப்பா? என்ற போராட்டம் தொடர்ந்த நிலையில்., இந்த போராட்டம் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று முடிவிற்கு வந்துள்ளது. பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து., இந்தியாவின் சுதந்திர தினத்தன்று அழகிய குழந்தையாக உருவெடுத்தாள் எலீஸ்கா. அன்றைய தினமே சோக செய்தியாக குழந்தையின் தாயார் விண்ணுலகிற்கு பயணித்தார்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாக படுக்கையில் இருந்த பெண்., மருத்துவர்களின் தீவிர முயற்சியால் குழந்தையை பெற்றெடுத்து., குழந்தை பிறந்த சில நிமிடத்திலேயே விண்ணுலகை சென்றடைந்தார். மேலும்., மூளைச்சாவு அடைந்த பெண் 117 நாட்கள் குழந்தையை சுமந்து., பிரசவித்து இதுவே உலகில் முதல் முறையாகும். உதவி செய்த மருத்துவ துறையினருக்கு எங்களின் பாராட்டுக்கள்...
Tamil online news Today News in Tamil
English Summary
in Czech Republic brain death lady delivery baby after 117 days treatment