உலக நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்திய கரோனா.. யூகேவில் பெரும் அழிவு.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். 

இந்த வைரஸ் சீன நாட்டில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் யூகான் நகரில் இருக்கும் சந்தையில் விறால் மீன் விற்பனை செய்த பெண்மணிக்கு முதலில் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் சீனா முழுவதும் பரவிய வைரஸ், உலக நாடுகளுக்கும் அடுத்தடுத்து பரவி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போதுவரை சுமார் 204 நாடுகளுக்கு கரோனா பரவியுள்ள நிலையில், 1,518,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 88,505 பேர் உயிரிழந்துள்ளனர். 330,589 பேர் கரோனாவில் இருந்து பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் நேற்றைய நிலவரப்படி 148,220 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 747 பேர் உயிரிழந்து, மொத்த பலி எண்ணிக்கை 14,792 ஆக அதிகரித்துள்ளது.  

இத்தாலி நாட்டில் நேற்றைய நிலவரப்படி 139,422 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 542 நேற்று உயிரிழந்து மொத்த பலி எண்ணிக்கை 17,669 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 112,950 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று 541 பேர் உயிரிழந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,869 ஆக உயர்ந்துள்ளது. ஐக்கிய ஐரோப்பிய நாடுகளில் 60,733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 938 நேற்று உயிரிழந்ததை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7,097 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in corona virus Spain Italy UK France death ratio


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->