மின்னலால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார கம்பி.. 20 பேர் துடிதுடித்து பலியான பரிதாபம்.!!
In Congo electric shock attack peoples died
மத்திய ஆபிரிக்க நாட்டில் உள்ள காங்கோ குடியரசில் பிரசுவிலி மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது. அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக்காடாக சூழ்ந்துள்ளது.
காங்கோவின் பிரஸ்விலி மாகாணத்தில் உள்ள கிண்டலி பகுதியிலும் இடி மின்னலுடன் மழை பெய்த நிலையில், மின்னல் அங்குள்ள உயர் அழுத்த கம்பியை தாக்கியுள்ளது. இதனால் உயர் மின்னழுத்த கம்பிகள் அனைத்தும் அறுந்து விழுந்துள்ளது.
தரையில் மழைக்கு ஒதுங்கி இருந்த நபர்களின் மீது மின்கம்பிகள் விழவே, மின்சாரம் பாய்ந்ததால் 20 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், அங்குள்ள மருத்துவமனைக்கு அனைவரின் உடலை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
In Congo electric shock attack peoples died