பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து பெரும் விபத்து..! பரிதாபமாக பலியான மக்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு உலகம் முழுவதும் ஏற்படும் விபத்துகளால் நொடிப்பொழுதில் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். விபத்துகளில் உயிரிழக்கும் நபர்கள் அனைவரும் தங்களுக்கு அன்பான நபர்களை தவிக்கவிட்டு வருகின்றனர். 

ஜனநாயக குடியரசு நாடாக உள்ள காங்கோ நாட்டின் லுபு நகரில் இருந்து காங்கோவின் தலைநகரான கின்ஷானாவிற்கு பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து சென்று கொண்டு இருந்தது. 

இந்த பேருந்து அங்குள்ள பன்ஜா - குங்கு மனதிற்கு அருகேயுள்ள பகுதியில் வந்து கொண்டு இருந்த சமயத்தில்., பேருந்தின் பிரேக் திடீரென பழுதானதை அடுத்து., ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தலைகீழாக கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., பேருந்தில் மொத்தமாக 100 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தாக பேருந்தை கவனித்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும்., பேருந்து தீப்பற்றி எரிந்ததில் இன்னும் பலர் பலியாகியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in conga bus accident 20 peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->