நிலக்கரி சுரங்கத்தில் பெரும் விபத்து.! பரிதாபமாக பலியான உயிர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகத்தில் விபத்துக்கள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு., அதனால் பல உயிரிழப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில்., சீன நாட்டில் உள்ள வடக்கு பகுதியில் இருக்கும் ஷாங்சி மாகாணத்தில் பிங்யாவ் நகரம் உள்ளது. 

இந்த நகரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் தினமும் வழக்கம்போல பணி நடைபெற்று வந்த நிலையில்., நேற்று மதியம் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 

இந்த சமயத்தில்., யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென நிலக்கரி சுரங்கத்தில் கியாஸ் கசிந்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் நிலக்கரி சுரங்கத்தில் தீப்பிடித்து நிலையில்., நிலக்கரி சுரங்கத்திலிருந்து பணியாளர்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியபடி சுரங்கத்தை விட்டு வெளியேறினர். 

accident,

இந்த விபத்தில்., சில பணியாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்ட நிலையில்., 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும்., 9 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்., இவர்களை மீட்ட பாதுகாப்பு படையினர் உயிருடன் உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china mine factory fire accident peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->