கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்..!!
in china massive earthquake
சீன நாட்டில் உருவாகி உலகம் முழுவதும் உயிர்கொல்லி நோயானது உலக நாடுகளை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் சீனாவில் குறைந்திருந்தாலும், உலக நாடுகளில் சீனாவை விட கோர தாண்டவத்தை அதிகளவு வெளிப்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வராத நிலையில், அங்குள்ள சிசுவான் மாகாணத்தில் இருக்கும் ஷிஷூ நகரில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கமானது அங்குள்ள 80 க்கும் மேற்பட்ட கிராமத்தில் உணரப்பட்ட நிலையில், சுமார் 800 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் 79.38 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.87 கோடி) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in china massive earthquake