தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து..! 19 பணியாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சோகம்.!!
in china industry fire accident 19 peoples died
இந்த உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. உலகம் முழுவதிலும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி., நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துகள் அரங்கேறுவதாகவும்., இந்த விபத்துகள் சாலைகளில் ஏற்படுவது., பிற விபத்துகள் என்று வகையாக பிரித்தாலும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது.
இன்றுள்ள நவீனமயமாக்கப்பட்ட வாழ்வினை வாழ்ந்து வந்தாலும்., பெரும்பாலான விபத்துகள் என்பது சில தருணங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்றும்., விபத்துகளுக்கு பின்னர் பெரும் அழிவுகளும்., விபத்தில் இறக்கும் குடும்ப நபர்களை எண்ணி அவரது குடும்பத்தார்கள் வாடி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்., சீனாவில் உள்ள கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நீங்காய் கவுண்டி நகரில் இருக்கும் தொழிற்பூங்கா பகுதியில்., வீடுகளுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையானது செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று மதியத்தின் போது., எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து., தீவிபத்தை அறிந்த பணியாளர்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். மேலும்., தீயின் தாக்கமானது அடுத்தடுத்து வேகமாக பரவியதை அடுத்து., பணியாளர்களில் சிலர் தீயில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர்.
மேலும்., இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர்., கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீக்குள் சிக்கி உயிரிழந்த 19 பேரின் உடலை மீட்ட நிலையில்., சுமார் 8 பேரை தீக்காயத்துடன் மீட்டனர்.
இவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில்., இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இந்த தீ விபத்திற்கு தொழிற்சாலையின் பாதுகாப்பு குறைபாடு என்ற கருத்தும்., அங்குள்ள வட்டாரங்களில் பரவிக்கொண்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in china industry fire accident 19 peoples died