ஐஸ்க்ரீம் வாங்கி தராத காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த காதலி..!! கவனம்..!!
in china girl killed her boy friend due to ice cream problem
இந்த உலகில் காதல் என்ற வலையில் விழும் ஜோடிகளுக்கு பல விதமான பிரச்சனை ஏற்பட்டு வரும் நிலையில்., காதல் ஜோடிகள் தங்களுக்குள்ளான சண்டையின் காரணமாக அரங்கேறிய கொலை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., ஐஸ் க்ரீம் வாங்கி கொடுக்காத காதலனை காதலி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஜூமாடியன் பகுதியில் இருக்கும் ஹெனான் நகரில் இளம் காதல் ஜோடியொன்று நடந்து சென்று கொண்டு இருந்தது. இந்த சமயத்தில்., பெண்ணிற்கு அங்குள்ள கடைகளில் இருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற எண்ணமானது வந்துள்ளது. இந்த விருப்பத்தை தனது காதலரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட காதலன் ஐஸ் க்ரீம் சாப்பிட காதலிக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காதலிக்கும் - காதலனிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் சண்டையிட்டு கொண்டு இருந்த நிலையில்., ஆத்திரமடைந்த காதலி கத்தியால் காதலனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த வாலிபரை கண்டு பதறிப்போன மக்கள்., அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்ந்தனர். மருத்துவமனைக்கு விரைந்த இவரை சோதனை செய்த மருத்துவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட விசாரணையில்., பலியான நபருக்கு 22 வயது இருக்கலாம் என்றும்., இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காதலிக்க துவங்கியிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும்., ஐஸ் க்ரீம் வாங்கி தராத காரணத்தால் காதலி - காதலனை நான்கு முறை கத்தியால் குத்தியிருக்கலாம் என்றும்., காதலனை குத்தி கொலை செய்த பின்னர் தப்பியோட முயற்சிக்கையில்., அங்குள்ள பொதுமக்கள் அவரை பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இதனை போன்று காதலர் தினத்தன்று அலைபேசி வாங்கி தராத காதலனை 52 முறை அறைந்த பிரச்சனையும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in china girl killed her boy friend due to ice cream problem