சீனாவை தொடர்ந்து 5 நாடுகளுக்கு பரவிய கரோனோ வைரஸ் தாக்குதல்.. அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள உஹான் பகுதியில் கரோனா என்ற புதியவகை வைரஸ் பரவியிருப்பது அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்ட சீன நாட்டினை சார்ந்த 66 வயது முதியவர் மற்றும் 48 வயதான பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனையடுத்து இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டு வருவதால், இந்த வைரசால் தற்போது வரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைப்போன்று அங்குள்ள உஹான், பீஜிங், ஷாங்காய், ஸெனான், தியான்ஜின் மற்றும் ஜேஜியாங் போன்ற பகுதியிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது வரை 400 பேர் மட்டுமே இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பை கண்டறிந்துள்ள உஹான் பகுதியில் மக்கள் பயணம் செல்ல தடை விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இதனைப்போன்று வைரஸ் பாதிப்பை மக்கள் மறைக்க கூடாது என்றும் அரசின் சார்பாக மக்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்கா, தைவான் உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china corona virus spread america and Diwaan countries


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->