ஒரேநாளில் 81 பேர் துடிதுடித்து பலி.. கரோனாவால் பதறும் உலக நாடுகள்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் மனிதர்களின் உடலில் கடும் காய்ச்சலை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனிதனின் உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 25 நாடுகளில் பரவியுள்ளது. 

சீனா உள்ளிட்ட நாடு முழுவதும் பிப்ரவரி 8 ஆம் தேதி நிலவரத்தின் படி சுமார் 25,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டதில் 724 க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, சீனாவின் வூகான் நகரில் இருந்து கேரள வந்தவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் ஏற்கனவே இரண்டு பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவது நபருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சீன நாட்டவர்கள் 81 பேர் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். தற்போது வரை மொத்தமாக சுமார் 724 பேர் பலியாகியுள்ளதாகவும், கரோனா வைரஸால் 25,000 க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,100 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in china carona virus peoples died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->