சீன நிலநடுக்கத்தில் நடந்த இன்ப அதிர்ச்சி சம்பவம்.! பிரசவ வலியால் துடித்த பெண் பிரசவித்த குழந்தை படைத்த சாதனை.!!
in china a cute baby delivery after massive earthquake
இந்த உலகம் முழுவதும் அவ்வப்போது எதிர்பாராத பல விதமான அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து அவாப்ட்டது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு., மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில்., சீன நாட்டில் உள்ள சிசுவான் மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.55 மணிக்கும்., இன்று காலையும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களும் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகவும்., அதற்கு பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகவும் பதிவானது. நிலநடுக்கத்தை அறிந்த மக்கள் பதறியபடி வீதிகளுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் சிறிய அளவிலான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்த மக்கள் உடனடியாக வெளியே வர இயல்ததால் சுமார் 11 பேர் பரிதாபமாகி பலியானார்கள். சுமார் 122 பேர் படுகாயமடைந்த நிலையில்., சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்., சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்படுத்தியில் அமைந்துள்ள நகர் சங்கினிங். இந்த இடத்தில் பிரசவத்திற்க்காக பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில்., அவர் குழந்தையை பிரசவிப்பதற்கு சில நொடித்துளிகள் முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சரியாக நிலநடுக்கம் நிறைவு பெற்றவுடன் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அறிவித்த மருத்துவர்கள்., நிலநடுக்கத்திற்கு பின்னர் பிறந்த முதல் குழந்தையாக அறிவித்தனர். இந்த நிகழ்வானது அந்த பகுதியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்ல வேலையாக நிலநடுக்கத்தால் இருவருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் நலமாக உள்ளனர்.
English Summary
in china a cute baby delivery after massive earthquake