கனடாவில் இந்திய மாணவி கொலை... கண்ணீரில் பெற்றோர்.. வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in canada indian college girl student killed police investigation going on
கனடா நாட்டில் இருக்கும் பூட்டப்பட்ட இல்லத்தில் இருந்து இரண்டு மாணவிகளின் சடலம் அந்நாட்டின் காவல் துறையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடா நாட்டில் இருக்கும் சர்வே பகுதியை சார்ந்த இல்லத்தில் இரண்டு மாணவிகள் சடலமாக இருந்துள்ளது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும்., மாணவிகளின் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்., இருவரில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இவர்களை கொலை செய்தவர் யார்? எதற்காக இருவரும் கொலை செய்யப்பட்டார்கள்? என்பது குறித்த தகவல் இல்லாத நிலையில்., ஒருவர் இந்திய நாட்டினை சார்ந்த மாணவி என்பது தெரியவந்துள்ளது. இவரது இறப்பு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்., இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் தரப்பில் கனடா நாட்டின் காவல் துறையினர் எங்களை தொடர்பு கொண்டு சோக செய்தியை கூறப்போவதாகவும்., தங்களின் மகள் கொலை செய்யப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும்., தற்போது கொலையாகியுள்ள மாணவி கனடாவில் கடந்து மூன்று வருடங்களாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
in canada indian college girl student killed police investigation going on