செயற்கை கருத்தரிப்பு செய்ய வந்த பெண்களுக்கு மருத்துவரின் உயிரணுவை வைத்து கருத்தரிக்க வைத்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நிலையில் பெரும்பாலானோருக்கு குழந்தையின்மை பிரச்சனையானது ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரி செய்ய சில நேரம் மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சையெடுத்து கொண்டு குழந்தை பெறுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. கனடா நாட்டில் குழந்தையின்மை சிகிச்சைக்கு அங்குள்ள பிரபலமான மருத்துவர்களில் ஒருவனாக இருப்பவன் நார்மன் பார்வின். இவன் குழந்தையின்மை பிரச்சனைக்காக சிகிச்சைக்கு வரும் தம்பதிகளுக்கு செயற்கை கருவூட்டல் மூலமாக குழந்தைகள் கருத்தரிக்க செய்து வந்துள்ளான். 

இந்த செய்தியை அறிந்த பல குழந்தையில்லாத பெண்கள் இவனது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர். அவ்வாறு சிகிச்சைக்கு செல்லும் பெண்களுக்கு செயற்கை செறிவூட்டல் மூலம்., அவர்களின் துணையின் உயிரணுக்களை எடுத்து கருப்பைக்குள் செலுத்தி குழந்தையை உருவாக்கி வந்துள்ளார். ஆண்மைகுறைபாடு இருக்கும் தம்பதிக்கு அவர்களின் விருப்பத்துடன்., உயிரணுக்களை வழங்க முன்வரும் தம்பதிகளின் ஒப்புதலுடன் பெற்று குழந்தையை உருவாக்கி வந்துள்ளார். 

இந்த நிலையில்., பெண்களின் அனுமதியின்றி மற்றும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களுக்கு துணையில்லாத நபர்களின் உயிரணுக்களை எடுத்து பெண்களை கருத்தரிக்க வைத்துள்ளதாக புகார்கள் தொடர்ந்து எழுந்தது. கொடுமையிலும் கொடுமையாக சுமார் 11 பெண்களுக்கு அவனின் உயிரணுக்களையே உபயோகம் செய்து கருத்தரிக்க வைத்துள்ளான். இந்த பிரச்சனையானது தற்போது வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இவனிடம் சிகிச்சை பெற்ற அந்த குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை செய்த சமயத்தில் குடும்பத்தினருடன் அந்த குழந்தைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்ற செய்தி தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாது குழந்தைக்கு செலியாக் என்ற தொற்றுநோயும் ஏற்பட்டுள்ளது. இந்த வகை நோய் பரம்பரையாக மட்டுமே ஏற்படும் என்ற உண்மை தெரியவந்த நிலையில்., சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு இது போன்ற நோயே இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுமார் 10 ஆயிரம் அமெரிக்கா டாலர்கள் விதித்து உத்தரவிட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது இந்த கொடூரத்தில் ஈடுபட்ட மருத்துவனின் மருத்துவ சான்றிதழையும் கைப்பற்றி அவனை மருத்துவராக பணியாற்ற தடை வைத்ததும் உத்தரவிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Canada doctor do a artificial pregnancy method use sperms his own illegally


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->