கனடா நாட்டிற்கு அதிகளவு வரும் கர்ப்பிணி பெண்கள்.. அதிரிச்சியூட்டும் காரணம்..!!
in Canada country other country pregnant lady delivery due to green card
கனடா நாட்டில் குடியுரிமை பெறுவதற்காக பிறநாடுகளில் உள்ள கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கனடா நாட்டில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சுகளிடம் இருந்து தொடர் புகார்கள் எழுந்துள்ளது.
மேலும்., பிற நாடுகளில் உள்ள பெண்கள் குழந்தைகளை கனடா நாட்டில் பெற்றெடுக்கும் பட்சத்தில்., அக்குழந்தைக்கு கனடா நாட்டுடைய குடியுரிமை கிடைத்துவிடும் என்ற நாடுகளின் அடிப்படையில் கனடாவும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இதனால் பல கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் கனடா நாட்டிற்கு வந்துவிடும் நிலையில்., பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கொலம்பியா ரிச்மன்ட் மருத்துவமனையில் சுமார் 1300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறாக பிற நாட்டவர்கள் அதிகளவில் வருவதால்., தங்களது நாட்டில் இருக்கும் மக்களை கவனிக்க இயலவில்லை என்று புகார்கள் தெரிவித்துள்ளனர். சில எதிர்பாராத சூழ்நிலையால் இங்கு வருபவர்கள் குழந்தையை பெற்றெடுத்தால் பிரச்சனை இல்லை.
மாறாக குடியுரிமைக்கு ஆசைப்பட்டு இங்கு வந்து குழந்தையை பெற்றெடுப்பது சரியில்லை. இதனால் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நபர்களுக்கு அதிகளவு அழுத்தம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக குழந்தையை பெற்றெடுத்துள்ள பெண்கள் அனைவரும் குழந்தைகள் நன்கு படித்து வளர்ந்த பின்னர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து இவர்களும் புலம்பெயர்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Canada country other country pregnant lady delivery due to green card