வீட்டுக்குள் இருந்த மக்களை வீதிக்கு இழுத்து வந்து கொடூர கொலை செய்த பயங்கரவாதிகள்.. 20 பேர் துடிதுடித்து பலி.!! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினோ பாசோவில் கடந்த சில வருடங்களாகவே பயங்கரவாதத் தாக்குதலானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அந்த நாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் பிராந்தியம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறது. 

இந்த நிலையில், சாகோஸ் பிராந்தியத்தின் தலைநகரான டோரி அருகேயுள்ள பாணி என்ற கிராமத்தில், நேற்று பயங்கரவாதிகள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதலை நடத்தினர். 

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கண்ணில்பட்டவர்களை சுட்டு தள்ளினர். இதுமட்டுமல்லாது அங்குள்ள வீடுகளில் இருந்த மக்களை இழுத்து வந்து வீதியில் போட்டு சுட்டு கொலை செய்துள்ளனர். 

இந்த கொடூர தாக்குதலில் பெண்கள் உட்பட சுமார் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதல் ஜிகாதி பயங்கரவாத அமைப்பினரால் நடத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரத்தின் போது அங்குள்ள சந்தையில் 39 பேரை இதேபோன்று சுட்டுக் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Burkina Faso jihad terrorist attack peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->