பற்களில் பாப்பான் மாட்டியதில் மரணவாயிலை தொட்ட தீயணைப்பு வீரர்..!! - Seithipunal
Seithipunal


பிரிட்டன் நாட்டினை சார்ந்த 41 வயதாகும் தீயணைப்பு வீரரான ஆடம் மார்ட்டின்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாப்கார்ன் சாப்பிட்டுள்ளார். இச்சமயத்தில் பாப்கார்னின் சிறிய அளவிலான துண்டு பல்லின் பின் பக்கமாக சிக்கியுள்ளது. 

இதனால் கடுமையான அசவுகரியத்தை உணர்ந்த ஆடம்., எப்படியாவது பாப்கார்னை எடுக்க வேண்டும் என்று நினைத்து கைகளில் கிடைத்த பொருளை வைத்து முயற்சி செய்துள்ளார். 

இதற்காக பேனா மூடி., கம்பி துண்டு மற்றும் உலோக ஆணி என்று கூறி அனைத்தையும் பயன்படுத்த நிலையில்., ஈறு கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான பல் வழியிலும் தனது முயற்சியை கைவிடாது இருந்துள்ளார். 

இந்நிலையில்., ஒரு நாள் கழித்து இரவு நேரத்தில் வியர்த்து கொட்டி., தலைவலி மற்றும் கடுமையான சோர்வால் அவதியுற்ற நிலையில்., அளவுக்கு அதிகமான மார்பு வலியும் இருந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளார். 

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு இதயத்தை பாதிக்கும் எண்டோகார்டிஸ் நோய் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும்., இது பாக்டீரியாவின் மூலமாக இரத்த ஓட்டத்தில் பாய்ச்சப்பட்டு., இதய அறைகள் மற்றும் வால்வுகள் தாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதனையயடுத்து இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் தற்போது நலமாக இருப்பதாகவும்., இதற்கு பின்னர் கட்டாயம் நான் பாப்கார்ன் சாப்பிட போவதில்லை என்று ஆடம் கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Briton fire rescue officer almost died and come back form hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->