சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் அத்துமீறிய மருத்துவர்.! விசாரணையில் வெளியான பேரதிர்ச்சி தகவல்.!!
in Briton doctor sexual harassment with girl patients
சென்ற ஐந்து வருடங்களாக பெண் நோயாளிகளுக்கு மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த வந்த செய்தியானது தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் வாழும் உலகில் பல குற்றங்களை சட்டம் போட்டு தடுத்துவிடும் நிலையிலும்., பாலியல் குற்றங்களுக்கு என்ன செய்தாலும் அது மீண்டும் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.
பிரிட்டன் நாட்டில் இருக்கும் லண்டனில் மணீ ஷா என்ற மருத்துவர் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஐந்து வருடங்களில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்த பல புகார்கள் எழுந்த நிலையில்., விசாரணைக்கு பின்னர் இது குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்., தொலைக்காட்சியில் நடித்து வரும் நடிகையொருவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்துள்ளார்.
தற்போது வரை சுமார் 21 பாலியல் தொல்லை குறித்த புகார்கள் வந்துள்ள நிலையில்., 13 புகார்களை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மருத்துவம் பார்க்க தடை விதித்த நிலையில்., இவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Briton doctor sexual harassment with girl patients