பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய நான்கு நாய்கள்.! கதறிய தாயாரின் இறுதி சோகம்..!!
in British dogs byte small baby hardly injuries
பிரிட்டிஷ் நாட்டில் உள்ள லிவர்பூல் பகுதியை சார்ந்த dingle நகரில் வசித்து வருபவரின் பெயர் சாண்ட்ரா. இவரின் இல்லத்தில் கடந்த 2016 ஆம் வருடத்தின் மே மாத 7 ஆம் தேதியன்று நடைபெற்ற துயரினை தற்போது கூறியுள்ளார்.
கடந்த 2016 ஆம் வருட மே மாதத்தின் 7 ஆம் தேதியன்று நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நான்., பின்னர் வீட்டிற்குள் வந்தேன். இந்த சமயத்தில்., எனது இரண்டு வயது குழந்தையான எல்லா (Ella) வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில் இருந்தான்.
இந்த சமயத்தில்., எனது பக்கத்து வீட்டுக்காரரின் அமெரிக்க புள்ளி வகை நாயானது வீட்டின் வேலியை தாண்டி குதித்து., தோட்டத்தில் நின்று கொண்டு இருந்த எனது மகனை கடித்து குதறியது. தோட்டத்திற்குள் நாய்கள் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த சாண்ட்ரா., தனது பிற குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு தோட்டத்திற்குள் சென்றுள்ளார்.
தோட்டத்திற்கு சென்ற சாண்ட்ராவிற்கு பெரும் அதிர்ச்சியாக., குழந்தை எல்லாவை நான்கு நாய்கள் சேர்ந்து கடித்து குதற துவங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் குழந்தையை காப்பாற்ற முயற்சிக்கையில்., நாய்கள் குழந்தையை விடுவதாக இல்லை.
பின்னர் இவரின் அலறல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தோட்டத்திற்கு வந்துள்ளனர். இந்த தருணத்தில்., குழந்தை உதவிக்காக போராடி., மயக்க நிலைக்கு சென்றுள்ளது. ஒரு நாய் குழந்தையின் கால்களையும்., மற்றொன்று முகத்தையும் என நான்கு நாய்களும் சேர்ந்து கரித்துண்டுகளை போல குழந்தையை பந்தாடியுள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை மீட்ட சாண்ட்ரா., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் பெரும் தீவிர சிகிச்சை., நான்கு வாரங்கள் சிகிச்சைக்கு பின்னர் குழந்தை உயிர் பிழைத்துள்ளது. சிகிச்சைக்கு பின்னர் இப்போது காயத்தின் தழும்புகள் மறைந்தாலும்., இந்த தாக்கத்தில் இருந்து நான் மீளவில்லை என்று சாண்ட்ரா கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in British dogs byte small baby hardly injuries