பிரேசில் கனமழை வெள்ளம்.. ஷாக்கிங் வானிலை ரிப்போர்ட்.. 59 பேர் பலி..!!
in Brazil rain flood people died and missing
தென்னமெரிக்க நாட்டில் உள்ள பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்னமெரிக்க நாட்டில் உள்ள பிரேசிலில் உள்ள மினாஸ் ஜெரியாஸ் மாநிலத்தில் இருக்கும் இப்பிரிட் நகரில் கடுமையான மழை பெய்துள்ளது. மேலும், அங்குள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இல்லங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால், சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 17 பேர் மயமாகியுள்ளதாகவும், 12 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதியில் இருந்து பெய்து வரும் தொடர்மழை, பிரேசில் வரலாற்றில் 110 வருடங்கள் இல்லாத அளவுக்கு பெய்துள்ளதாகவும் அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போதுவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள 99 நகரங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 57 பேர் தற்போதுவரை பலியாகியுள்ளனர், 17 பேர் மாயமாகியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Brazil rain flood people died and missing