விமானத்திற்கு அடியில் ட்ரக் சிக்கி உயிரிழந்த பணியாளர்கள்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டில் உள்ள நாக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்த விமானமொன்று சுமார் 189 பயணிகளுடன் பாங்காக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில், தன்சிவ்ர்ன் என்ற பொறியாளர் மற்றும் டிரக் ஓட்டுநர் இப்பகுதிக்கு அருகே சென்றுக்கொண்டு இருந்த நிலையில், விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் ஓடியுள்ளது. 

அங்கு சென்றுகொண்டு இருந்த ட்ரக்கின் மேல்புறமாக விமானம் சென்று விபத்திற்குள்ளாகவே, ட்ரக் இடிபாடுகளில் இருவரும் சிக்கி துடிதுடித்துள்ளனர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த விமான நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரிகளை விரைந்து அனுப்பியுள்ளனர். 

இடுபாடுகளின் கீழ் இருந்த இருவரையும் மீட்ட நிலையில், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  

விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை மற்றும் பணிஆனை விமான நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் மற்றொரு விமானம் மூலம் பயணத்தை தொடங்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Bangkok Boeing 737 flight bull the truck two members died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->