தடம்புரண்ட இரயில்... இரண்டு பேர் துடிதுடித்து பலி.. அதிர்ச்சி வீடியோ காட்சிகள்.!!
in Australia train accident two peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. மனிதனின் தேவைக்காக, நேரத்தை குறைக்க, பணிகளை எளிமையாக்க உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் சில நேரங்களில் எதிர்பாராது விபத்துக்களில் சிக்கிவிடுகிறது.
உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துகள் நடைபெறுவதாகவும், இதனால் பலரும் உயிரிழப்பதும் தொடர்ந்து தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய நாட்டில் இரயில் தடம் புறண்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னி நகரில் இருந்து, மெல்போர்ன் நோக்கி பயணத்தை இரயில் துவங்கியது. இந்த இரயிலில் 160 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில், அங்குள்ள வாளன் நகருக்கு அருகே சென்ற போது இரயில் தடம் புறங்குள்ளது.
இந்த விபத்தில் இரயிலில் உள்ள 5 பெட்டிகள் கவிழ்ந்த நிலையில், 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர். சுமார் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Australia train accident two peoples died