கட்டுக்கடங்காமல் மீண்டும் பரவும் காட்டுத்தீ.. அரசு வெளியிட்ட அவசர உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளான நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரை பகுதிகளில் காட்டு தீ இன்னும் தொடர்ந்து பரவி வருகிறது. 

அங்குள்ள விக்டோரியா மாகாணத்தில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் காரணத்தால், அப்பகுதியில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். 

இந்த நிலையில், சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு இடையேயான சிறிய நகரமான காண்பவைர் நகரில் சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். 

காண்பைவர் மாகாணத்தில் கடந்த 20 வருடங்களுக்கு இல்லாத அளவு மிகப் பெரிய காட்டுத் தீயானது தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 18 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பரப்பளவில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. 

இந்த தீயானது தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நெருங்கி வரத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக கான்பைவர் தலைநகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், அங்கு நிலவும் வறண்ட வானிலை மற்றும் அதிக வெப்பத்தின் காரணமாக காற்றின் வேகமும் தீ கட்டுக்கடங்காமல் எரிய துவங்கியுள்ளதால், சுற்றுப் புறங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Australia forest fire govt announce emergency


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->