மாணவியின் குழந்தை இடுப்பில்.. மற்றொரு புறம் மகத்தான ஆசிரியர் பணி..!!
in america teacher help student
அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சர்ஸ் மாநிலத்தில் இருக்கும் சான் ஜாசிண்டோ கல்லூரியில் யேட்ஸ் என்ற மாணவி பயின்று வருகிறார். இவர் படித்துக்கொண்டு வரும் நிலையிலேயே பணிக்கும் சென்று வருகிறார்.
மேலும்., இவரது கைகுழந்தையையும் தன்னுடன் வைத்து கொண்டு அனைத்து பணிகளையும் செய்து வரும் நிலையில்., சம்பவத்தன்று மாணவிக்கு தேர்வு இருந்துள்ளது.
தேர்வு துவங்குவதற்கு சிறிது நேரம் இருக்கும் நிலையில்., பணிக்கு சென்ற கையோடு தேர்வுக்கு குழந்தையுடன் வந்துள்ளார். இந்த சமயத்தில்., தேர்விற்கான குறிப்புக்கள் குறித்து பேராசிரியை பார்பி ஹீக்ஸ் கற்று கொடுத்துள்ளார்.
யேட்ஸ் வந்தவுடனே அவரது குழந்தையை இடுப்பில் வாங்கி வைத்துக்கொண்டு., பாடத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருந்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பாராட்டுகளை பெற்றது.
மேலும்., இது தொடர்பாக தெரிவித்த யேட்ஸ்., "குழந்தையை வாங்கி வைத்துக்கொண்டு பாடத்தின் மீது கவனம் செலுத்த சொன்னது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்., பிறருக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் ஆசிரியர் ஹீக்ஸ் கட்டாயம் செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in america teacher help student