கர்ப்பிணிகளே உஷார்.! குழந்தையை கடத்துவதற்கு தாயின் வயிறை அறுத்து., குழந்தையை கடத்திய சோகம்.!! துடிதுடிக்க நேர்ந்த பரிதாபம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள்., அவர்களின் நம்பிக்கை வைக்கும் குணத்தால் நடைபெற்று வருகிறது என்ற உண்மையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அவ்வாறு பல தொடர் அநீதிகள் நடைபெற்று வரும் நிலையில்., தற்போது வெளியான அதிர்ச்சி தகவல்., பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

ஒரு பெண்ணானவள் கர்ப்பிணியாக நமது இல்லங்களில் இருக்கும் சமயத்தில் அவரை தலை மேல் வைத்து தாங்கும் பழக்கத்தை நாம் வைத்துள்ளோம். அவரின் உடல் நலத்திற்கு தேவையான மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை அவருக்கு தேடி தேடி வழங்கி., வயிறில் இருக்கும் குழந்தையை பாதுகாக்க., அந்த பெண்ணை உள்ளங்கையில் வைத்து தங்குவோம். இந்த நிலையில்., இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ நகரை சார்ந்த பெண்மணியின் பெயர் ஒசாவோ லோபஸ் (வயது 19). இவருக்கு கடந்த வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில்., இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை தேடி அலைந்தும் காணவில்லை. 

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான குடும்பத்தினர்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில்., நேற்று வீட்டின் அருகே அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்., அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை. 

இவரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., முகநூலின் மூலமாக துவக்கப்பட்ட இணையம் வழியாக., கர்ப்பிணி பெண்களை குறிவைக்கும் கும்பலானது., அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆடைகளை இலவசமாக வழங்குவதாக கூறி., சம்பவ இடத்திற்கு வர வளைத்து பின்னர் அவர்களின் கருவை திருடி சென்றது தெரியவந்துள்ளது. 

இவர்களின் அழைப்பை ஏற்று சம்பவத்தன்று குழந்தைகளுக்கு துணிகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்குவதற்கு சென்ற நிலையில்., கர்ப்பிணி பெண்ணை அதே பகுதியை சார்ந்த கிளாரிசா பிகுயரோயா (வயது 46)., அவரது மகள் டெசிரி (வயது 24) மற்றும் கிளாரிசாவின் காதலன் பியோட்போபர்க் (வயது 40) ஆகியோர் சேர்ந்து கடத்தி., அவரை கொலை செய்து பின்னர் அவரின் குழந்தையை திருடியுள்ளது தெரியவந்தது. இதுமட்டுமல்லாது இவர்கள் மூவரும் குழந்தை கடத்தல் கும்பலை சார்ந்த நபர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் அனைவரையும் கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america pregnant girl stomach catted theft baby


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->