கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை கடத்தி சென்ற சோகம்., அரங்கேறிய துயரம்.! சிக்கும் பின்னணி கும்பல்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள்., அவர்களின் நம்பிக்கை வைக்கும் குணத்தால் நடைபெற்று வருகிறது என்ற உண்மையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அவ்வாறு பல தொடர் அநீதிகள் நடைபெற்று வரும் நிலையில்., தற்போது வெளியான அதிர்ச்சி தகவல்., பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. 

ஒரு பெண்ணானவள் கர்ப்பிணியாக நமது இல்லங்களில் இருக்கும் சமயத்தில் அவரை தலை மேல் வைத்து தாங்கும் பழக்கத்தை நாம் வைத்துள்ளோம். அவரின் உடல் நலத்திற்கு தேவையான மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை அவருக்கு தேடி தேடி வழங்கி., வயிறில் இருக்கும் குழந்தையை பாதுகாக்க., அந்த பெண்ணை உள்ளங்கையில் வைத்து தங்குவோம். இந்த நிலையில்., இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ நகரை சார்ந்த பெண்மணியின் பெயர் ஒசாவோ லோபஸ் (வயது 19). இவருக்கு கடந்த வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில்., இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை தேடி அலைந்தும் காணவில்லை. 

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான குடும்பத்தினர்., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., விசாரணை மேற்கொண்டு துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில்., நேற்று வீட்டின் அருகே அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்., அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை. 

இவரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர்., அவர் உயிருக்கு போராடிய சமயத்தில் அவரின் வயிறை கிழித்து குழந்தையை எடுத்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையானது வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை கேட்ட காவல் துறையினர் அவருடைய குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆடையை வழங்குவதாக கூறிய முகநூல் குழு ஒன்று., தொடர் ஆசையை காட்டி வற்புறுத்தியதால் பேரில்., அவர்களை சந்திக்க சென்ற சமயத்தில் இந்த கொலை மற்றும் வயிற்றில் இருந்த சிசு கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலைக்கு பின்னால் இருக்கும் கும்பல் குறித்த விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமப்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in america pregnant girl baby was theft by gang when killed mother


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->