ஸ்தம்பித்துப்போன மிஸிஸிபி... வரலாற்றில் மூன்றாவது முறையாக நிறைந்த பிரமாண்ட அணை..!!
in america Mississippi peoples struggled due to heavy rain
அமெரிக்க நாட்டில் உள்ள மிசிசிபி மாநிலத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளநீரால் மிதந்து வருகிறது.
அமெரிக்க நாட்டில் உள்ள மிஸிஸிபி மாநிலத்தின் தலைநகராக ஜாக்சன் நகரம் உள்ளது. இந்த நகரம் மற்றும் இதனைச்சுற்றியுள்ள நகர்ப்புற பகுதிகளில் கடந்த வாரத்தின் போது கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த மழையானது அங்குள்ள வரலாற்றில் மூன்றாவது முறையாக பேர்ல் என்ற நீர்த்தேக்கத்தை அதன் முழுகொள்ளளவை எட்டவைத்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் நிறைந்துள்ளது. இந்த பகுதியில் சிக்கியுள்ள மக்களை காக்கும் பொருட்டு, மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in america Mississippi peoples struggled due to heavy rain